Friday, 25 March 2011

இவரா உறுதியானத் தலைவர்?

                      
இலவசத்தை அள்ளி தந்து இந்த நாட்டை பிச்சைக்கார நாடாக கலைஞர் மாற்றிவிட்டார் என்று எக்காளமிட்ட கூட்டம் இன்று ஆகா அம்மா அருமையான தேர்தல் அறிக்கை தந்துவிட்டதாக ஆரவாரமிடுகிற்து. கலைஞரின் அறிக்கையை ஜெராக்ஸ் எடுத்து வெளியிட்டதற்கே இப்படி ஒரு ஆர்ப்பாட்டமா? அறிவு ஜீவியான அம்மா ஒரு தேர்தல் அறிக்கையினை கூட நகல் எடுத்து வெளியிடுகின்ற நிலைமையினை பார்த்து நாடே சிரிக்கிறது. கூட்டணி கட்சிகளுக்கு அவர் தந்த மரியாதையை நடிகர் கார்த்திக்கும் வைகோ அவர்களும் இதயத்திலிருந்து இரத்தம் வடிகின்ற அளவிற்கு மேடைதொறும் புலம்பிகொண்டிருக்கிறார்கள். அம்மாவிற்கு ஆணவம் குறையவில்லை என்று அறிவிக்கிறார்கள். அரசு ஊழியர்களை பணி  நீக்கம்  செய்த அற்புதமான நிர்வாகி என்று பாராட்டிய கூட்டம் ,அவர் அடுத்த முறை ஆட்சிக்கு வந்தால் அரசு ஊழியர்களின் சலுகைகளையெல்லாம் ரத்து செய்துவிட்டு அந்த பணத்தை கொண்டு தமிழ் நாட்டை பணக்கார நாடாக மாற்றிவிடுவார் என்றெல்லாம் கொக்கரித்தனர். அதைதான் அவர் தேர்தல் அறிக்கையிலும் எதிர்பார்த்தனர். ஆனால் அம்மையார் அவர்களோ அரசு ஊழியர்களின் சலுகைகள் அப்படியே நீடிக்கும் என்று உறுதி தருகிறார். தேர்தலே இல்லாத ஒரு நாட்டின் சர்வாதிகாரி மாதிரி, தன் மனதிற்கு தோனறியவற்றையெல்லாம்   செய்த செயலலிதா, தேர்தல் அறிவித்தவுடன் நான்கு ஆண்டுகளாய் அவர்  போட்ட சட்டங்கள் அனைத்தையும் தலைகீழாக மாற்றியதை தமிழ் நாடு நன்கு அறியும்.இவர்தான் உறுதி மிக்க தலைவரா? கலைஞர் குடும்ப ஆட்சியை அகற்றக் கோரும் இவர் , சசிகலா குடும்ப ஆட்சியை கொண்டு வர விரும்புகிறரா? ஸ்பெக் ட்ரம் ஊழல் பற்றி பேசும் இவர் , ஸ்டெர்ல்ய்ட் கம்பனியிடம், எறத்தாழ 1000 கோடி பெற்று கொண்டுதான் தனக்கு அநீதி இழைக்கப்பட்டதாக வைகோ கூறும் குற்றச்சாட்டு , யாரைப் பற்றியது என்பதை விளக்குவாரா? சோ ராமசாமி போன்றவர்கள் சொல்வதுபோல் இவர் ஒரு உறுதியான ,நிர்வாகத் திறமை வாய்ந்த அரசியல்வாதியாக இருந்திருப்பாரேயானால் இவருடைய தேர்தல் அறிக்கை என்ன மாதிரி இருந்திருக்கவேண்டும்?
1)நான் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே நாட்டை குட்டிச்சுவராக்கும் இலவசத் திட்டங்கள் அத்தனையையும்  நிறுத்திவிடுவேன்.               
2) அரசின் வருவாயில் 90 சதவிகிதம் அரசு ஊழியர்களின் ஊதியத்திற்கே போய்விடுவதால்அரசு ஊழியர்களுக்கு   கொடுக்கப்படும் அத்தனை சலுகைகளையும் உடன்  நிறுத்துவேன்.  
3) ஏழைகளை சுரண்டும் டாஸ்மாக் கடைகளை உடன் மூடுவேன்.
4)பேருந்துகளை தனியார் மயமாக்கி அரசுக்கு ஏற்பட்டுவரும்
  நஷ்டத்தை தடுப்பேன்.
5) மதமாற்றங்களை அனுமதிக்க மாட்டேன்.
6) விடுதலை புலிகளுக்கு ஆதரவாக உள்ளவர்களை பாதுகாப்புசட்டத்தின் கீழ் கைது செய்வேன்.
மேற் சொன்ன விஷயங்களுக்ககாத்தான் சோ ராமசாமி மற்றும் ஆனந்த விகடன் ஆசிரியர் போன்றவர்கள் இவரை வானாளாவ புகழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இவரோ கலைஞர் அறிக்கையினை நகல் எடுத்து இலவசங்களை வாரி இரைக்கிறார்.இவரா உறுதியானத்  தலைவர்? இவரா பொருளாதார வல்லுனர்?
மனசாட்சியை தொட்டு சொல்லுங்கள். விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் வெறும் உண்ர்ச்சி வயப்பட்டு, ஆத்திரத்துடனும் கோபத்துடனும் செயல்படும் இவரால் இந்த நாட்டிற்கு என்ன நன்மை விளைந்துவிடப் போகிறது?







No comments:

Post a Comment